செம்மீனை நான் பார்த்த போது எனக்கு வயது 11... See More .புரியாத மொழி. நான் அப்போது எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்.
ஆட்டம்,பாட்டம்,சண்டையில்லாத செம்மீன் ஒரு புது அனுபவமாகவிருந்தது.இந்துக்களும்,முஸ்லீம்களும்
கலந்து வாழும் கடலோரப் பிரதேசமொன்றைச் சேர்ந்த எனக்கு செம்மீனின் களமும்,பாத்திரங்களும் மிகவும்
நெருக்கமாக இருந்ததன.
'கடலினக்கரே போனோரே, மானச மைனே வரு' போன்ற பாடல்கள் அப்போதே மனதில் பதிந்து விட்டன.
வங்காளத்தைச் சேர்ந்த சலீல் சௌத்ரியின் இசை.மலையாளம் அறவே தெரியாத மன்னாடேயின் துயரக்குரல்,
கடற்கரையின் இரவையும்,.தென்னோலைகளின் சல சலப்பையும் ஊடறுக்கின்றது. ஷீலாவின் எதிர் வினையாற்றும்
முகபாவம் மறக்க முடியாதது.
பதிலுக்கு நமது தமிழர்கள் இரண்டு காரியங்கள் செய்து செம்மீனைப் பழி தீர்த்துக் கொண்டார்கள்.
1 . படகோட்டி படம் எடுத்தார்கள். 2 . ஷீலாவை வல்லவன் ஒருவனில் கவர்ச்சி நடனம் ஆட வைத்தார்கள்.
July 18, 2010 12:09 AM
No comments:
Post a Comment